உங்கள்
பார்வைக்கு தேடலில் கிடைத்த பழைய
ஞாபங்கள்!தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி
வடிவம்!!
அண்மையில்
சிங்கள ஊடகவியலாளர் ஒருவரை கொழும்பில்
வைத்து சந்திக்க முடிந்தது.அவர் தமிழ்
பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு
தேவை என்று தனது கட்டுரைகளில் தொடர்ந்தும்
எழுதிக்கொண்டிருக்கும் ஒருவர்.
தமிழ் பேசும் மக்களுக்கு உறுதியான ஒரு
அரசியல் தலைமை கிடைத்திருப்பதை தான்
உணர்ந்து கொண்டதாக அவர் என்னிடம்
தெரிவித்திருந்தார்.
ஏன் என்று கேட்டேன்.... யார் அந்த தலைமை
என்று அறியலாமா என்று கேட்டேன்.அவர்
என்னுடன் தொடர்ந்து பேசினார்.அவர்
மாற்று மொழியில் கூறிய அந்த கருத்துக்களை
தமிழ் வடிவில் தருகின்றேன்.
இலங்கை அரசியல் வரலாற்றில் பல முறை
மரணங்களை எதிர்கொண்டு மரணத்தையும்
வென்ற ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்
ஒளி வடிவம் என்று கூறி அதை என்னிடம்
காண்பித்து விட்டு சொன்னார்…
இந்த உரையின் இறுதியில்….சபையில் இருந்த
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர்களை நோக்கி புலிகளின் தலைவர்
பிரபாகரன் அவர்களிடம் போய் சொல்லுங்கள்
என்று கூறும் நம்பிக்கை தரும் வரிகள்
இவைகள்….
சல சலப்புகளுக்கு அஞ்சி மக்களையும் மண்ணையும்
கைவிட்டு ஓடமாட்டோம் என்று தனது உரத்த
சிந்தனையில் உறுதியோடு
தெரிவித்திருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
மீதும் அவரது கட்சியினர் மீதும் இன்று
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல்
தீர்வு நோக்கிய இலட்சியக்கனவுகள்
யாவும் சுமத்தப்பட்டிருக்கின்றது.
நடை முறை சாத்தியமான வழி முறையில் அவர்கள்
முன்னெடுக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொண்டு
அனைத்து தரப்பினரும் அந்த வழிமுறையின்
மூலம் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல்
சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்
என்பது எதிர்பார்ப்பு.
அன்றைய தினம் கொழும்பு இசப்பத்தான மாவத்தையில்
உள்ள அமைச்சு அலுவலகத்தில் புலிகளின்
தலைமையால் ஏவி விடப்பட்ட தற்கோலை
குண்டுதாரி வெடித்து சிதறி இறந்து
கிடைக்கையில்…
தன்னை தேடி வந்த தற்கொலை
குண்டுதாரியின் வெடித்து சிதறிய உடலலை
கண்டும் துளியளவும் அச்சப்படாமல் அதில்
கொல்லப்பட தனது தோழர் ஒருவரின் மரணத்தை
கண்டும். அந்த அதிர்ச்சியில் இருந்து
அடுத்த கணமே மீண்டு அவர் அன்றைய தினம்
பாராளுமன்றத்தில் ஆற்ற இருந்த உரையை
ஒத்தி வைக்காமல் ஆற்றியிருந்தார்.
எந்தவொரு அரசியல் தலைவரும் சரி இது
போன்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு
குறைந்தது இரண்டு மூன்று தினங்களாவது
காத்திருக்க வேண்டும். ஆனால் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் சாதாரண தலைவர்களில்
இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு
துணிச்சலான ஒரு அரசியல் தவைவர் என்பதற்கு
இந்த ஓளிப்பதி காட்சி ஆதாரம்.